Thursday, October 14, 2010

வாய் இறுகல் நோய்

நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.



அறிகுறிகள்:
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.

காரணிகள் :
பொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.



பாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.

துவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.

நன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.


.

Friday, October 1, 2010

திருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பதிவர்கள்

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO