Saturday, December 26, 2009

சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...

அன்பின் நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பை கலக்கி விட்டீர்கள்......கடந்த ஒருவாரமாக அனைவரும் இதை பற்றிதான் பேச்சாக இருக்கிறது...இதுவரை நடந்த சந்திப்புகளிலேயே ஈரோடு சந்திப்பு தான், வந்தவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும், வராதவர்களுக்கு பெரும் ஏக்கத்தையும் கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

உங்களின் ஏற்பாடுகள் அனைத்தும், அனைவருக்கும் ஒரு முன்னுதாரமாக அமைந்திருக்கிறது....

உண்மையில் நமது ஈரோடு பதிவர் சந்திப்பு ஒரு குடும்ப விழாபோல, நண்பர்கள் விழா போல சிறப்பாக நடந்தமையையும், கலந்து கொண்டவர்களின் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளமையும் கண்டு நானும் ஈரோட்டுகாரன், எங்க ஊரில் நடந்த சந்திப்பு என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைய வைத்துவிட்டீர்கள்.

கடந்த சில நாட்களாகவே இதைப்பற்றி கடிதம் எழுத வேண்டும் முயற்சி செய்தேன், ஆனால் கடும் வேலை பளுவின் காரணமாக முடியவில்லை. (Here, the main Market season is Christmas and New Year only)

இந்த இயந்திர உலகத்தில், மனிதனை மனிதன் மதிக்காத உலகத்தில், சொந்த வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு....பொதுநலன் பற்றியும் கொஞ்சம் சிந்தித்து, அதற்காக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், உடல் உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் செலவு செய்த உங்களுக்கும் உங்களுக்கு உதவியாக இருந்த நமது ஈரோடு வாழ் நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன், ,

என்னையும் இதில் சிறு பங்களிப்பு செய்ய அனுமதி அளித்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்

உங்கள் சமூக பணி தொடர என்றும் துணைவர தயாராக இருக்கிறேன்,

மீண்டும் நன்றிகள் பல

அன்புடன்,
ந. சண்முகராஜ்
( Togo- West Africa - 00228- 9363900 and 00228 - 9909333)

குறிப்பு: 20.12.2009 ஞாயிறு அன்று நடந்த ‘ஈரோடு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்தின்’ பங்களிப்பாளராகவும், அந்நிகழ்ச்சியினை முழுவதும் வீடியோ கவரேஜ் செய்ய செலவுகளை ஏற்றவருமான அன்பர் ந.சண்முகராஜ் அனுப்பிய மின் மடல் இது. அந்த காணொளித்தொகுப்பும் வந்துவிட்டது, விரைவில் வலையேற்றம் செய்யப்படும்.

................ ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக க. பாலாசி.


Thursday, December 24, 2009

பதிவர் லதானந்த் கவனத்திற்கு

சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான பதிவர்களிடமிருந்து சில பல இடுகைகளும், பற்பல பின்னூட்டங்களும் பார்க்க நேர்ந்த போதும் திரு. லதானந்த் அவர்களிடமிருந்து எதுவும் வரவில்லையென்பது ஆச்சரியமாக இருந்தது, அதேசமயம் அவரின் பின்னூட்டத்தை ஒரேயொரு பதிவரின் இடுகையில் மட்டுமே பார்க்க முடிந்தது வியப்பும் மகிழ்ச்சியும் கொடுத்தது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பட்டியலிட்டிருக்கும் குறைகளை குறைந்த பட்சம் எங்களிடம் நேரிடையாகவோ, அலைபேசி மூலமோ எந்தவொரு விளக்கமும் கேட்காமல் எழுதியது இன்னும் பெரிய ஆச்சரியத்தையும், கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்தது.

அவரின் விமர்சனம் குறித்த இடுகை
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்

//விருந்தினர்களை அழைத்துப் பேசவும் சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது வம்படியாகக் குறுக்கே குதர்க்கமாக விதண்டாவாதம் host ஒருவரே செய்வதை அனுமதித்தது சரியா? //

அழகாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்வில் அசாதாரணமான சூழல் உருவாகாமல் இருக்கும் பொருட்டே... அந்த இடத்தில் நாங்கள் அனுமதித்தது நிச்சயம் தவறுதான்.... அதற்காக பங்கேற்பாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்... ஆனால் கசப்பான உண்மை அந்தச் சூழல் நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று....


மற்றபடி நீங்கள் விமர்சித்த மற்ற விசயங்கள் முன்பே எங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் படி நடந்தேறியது... எங்களுக்கு இதுபோல் பல அமைப்புகளின் கூட்டங்களை, பல பயிற்சி வகுப்புகளை நடத்திய அனுபவம் உண்டு, அதன் அடிப்படையிலேயே, நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

Ice breaking என்பது இந்த நிகழ்வுக்கு முற்றிலும் அவசியமற்றது, பொருந்துவது சிரமமானது என்பதாலேயே தவிர்க்கப்பட்டது. அடுத்து Ice breaking பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமே மிக அவசியமான ஒன்று. பதிவர்களின் பெயர், அடையாளம் தெரிந்தவுடன் கரம் பற்றி, முகம் நோக்கி மிக சுவாரசியமாக அரவணைத்துப் பேசி மகிழ்ந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.

// பிற துறைகளில் எவ்வளவுதான் சிறப்புப் பெற்றவர்களாக இருந்தாலும் பதிவுலகுக்குத் தொடர்பற்றவர்களை அழைத்துப் பேச வைப்பது எதற்காக?//

இது நடத்துனர் குழுவும், தமிழ்மணம் திரட்டியும் இணைந்து முடிவுசெய்தது. அதுவும் அவர்களை வாழ்த்துரை மட்டுமே வழங்க அழைத்திருந்தோம்.

// ஒரு சிலரை மட்டும் (என்னை உள்பட) மேடையில் அமர வைப்பது ஒருவித பார்ஷியாலிடி போலத் தெரிந்தது//

ஒரு பார்ஷியாலிடியும் இல்லை.... எங்களுக்கு அடையாளம் தெரிந்த பதிவர்கள், கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என நடத்துனர் குழு பரிந்துரை செய்தவர்களை பேச வைக்க முடிவு செய்தோம்.

//புரவலர்களுக்கான priority ஆக இருக்குமோவென்றால் சீனா, நான், காசி போன்றோர் மேடையேறியதால் அந்த லாஜிக்கும் இடிக்கிறது//

நீங்கள், சீனா பதிவர்கள், காசி சிறப்பு அழைப்பாளர்...

//முதலிலேயே யாருக்காவது ஏதாவது தலைப்பில் பேச ஆர்வமா எனக் கேட்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமேயல்லாது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எந்த அளவுகோல் கொண்டு சிலரை மட்டும் மேடையேற்றுகிறார்கள் என (வெளியில் சொல்லாமல்) சிலர் நினைக்கலாம். (நான்தான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளுவதில்லையே!)//

பதிவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டுத்தான், அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறை சார்ந்து பேச அழைக்கப்பட்டனர். ஓரே ஒரு பதிவருக்கு மட்டும்தான் அரங்கிற்கு வந்தபோது அவர் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆனால் மேடையில் பேசிய் மற்றொரு பதிவர் ”என்ன தலைப்பில் பேசட்டும்” என்று கேட்டது முற்றிலும் நகைச்சுவைக்காகவே, ஏனெனில் அவரிடம் அன்று காலையே பேச வேண்டும் என்ற செய்தியையும், தலைப்பையும் நான் கூறிவிட்டேன்.... நாங்கள் சங்கடம் ஏற்படுத்தியதாக எழுதும் முன் குறைந்த பட்சம் அவர்களிடம் நீங்கள் கலந்து பேசியிருக்கலாம்


//(ஒன்றைக் கவனியுங்கள் நண்பர்களே! மிகச் சிறப்பாக எழுதுபவர்கள் சிறந்த பேச்சாளர்கள் அல்லர் என்பது பொது விதி)//


சரிதான்... இங்கு பேச்சாளராக மிளிரச் செய்ய அவர்களை மேடையேற்ற வில்லை. மனதில் இருக்கும் விசயத்தை பகிர்ந்து கொள்ள வைத்தோம்..


// ஒரு கட்டத்தில் மேடையில் முன்று சிறப்பு விருந்தினர்களை வைத்துக்கொண்டு நினைவுப் பரிசினை இரண்டு பேருக்கு மட்டும் தந்தது சரியா?//

முற்றிலும் தவறான திசைக்கு மாற்றும் தவறான கேள்வி. மேடையில் அமர்ந்ததில் பதிவர்கள் யார், சிறப்பு அழைப்பாளர்கள் யார் என்பதில் கூட உங்களுக்கு குழப்பம் இருப்பது தெரிகிறது... சங்கமம் தொடர்பான பழைய இடுகைகளை தயவுசெய்து வாசியுங்கள்.. எல்லா விபரமும் தெளிவாக உள்ளது... யார் யாருக்கு மேடையில் நினைவுப்பரிசு என்பதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... இது குறித்து பங்கேற்பாளர்கள் மத்தியில் எதுவும் திரிக்கப்பட்டு வருவது ஆரோக்கியமானதல்லவே.

//சங்கமத்தின் வருங்காலச் செயல் திட்டம் என்ன என்பதைப்பற்றி ஒரு தெளிவின்மை நிலவியதே?//


நிகழ்காலத்திட்டம் மட்டும் தான் அன்றைய இலக்கு... சங்கம் நடத்துவதுதான் அன்றைய செயல்திட்டம். வருங்காலத் திட்டமோ, செயல்பாடோ குறித்து குழுமம்தான் முடிவுசெய்ய வேண்டும்...


//நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் அதனை ஒருங்கிணைக்க ஐந்தாறு பேரை நியமித்தது சரியா?//

அதில் ஒன்றும் தவறில்லை... மேடையேற்றப்பட்டவர்கள் அனுபவம் மிக்க பதிவர்கள், வேறுபட்ட நகரங்களைச் சார்ந்தவர்கள்... ஆகவே பதிவர்கள் அவர்கள் மூலம் கலந்துரையாட வாய்ப்புகிடைத்தது... அனானி குறித்து நிறைய நேரம் பேசிய பின்பும், ஒரு கட்டத்தில் நான் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் நீங்களே பரிசல், சுமஜ்லா ஆகியோரிடம் கேள்வி கேட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

//மேற்கண்டவை அனைத்தும் பலத்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன்//

பலத்த சிந்தனைக்கு முன், இந்த விமர்சனங்களை வைக்கும் முன்.... அன்று நிகழ்ச்சியை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடத்திய எங்கள் பதிவர்களில் யாரேனும் ஒருவரையாவது அலைபேசியில் அழைத்து குறைந்த பட்சம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்திருக்கலாம்... அதன்பின்னும் உங்களுக்கு குறைகள் பட்டிருந்தால் தங்கள் வலைப்பூவில் வெளியிட்டிருக்கலாம்.

அப்படி ஏதும் செய்யாமல்.... அதை விடுத்து... உங்கள் மனதில் பட்டதை நிரந்தரமாக பதிவு செய்து கலந்து கொள்ளாத பதிவர்கள், வாசகர்களுக்கு எடுத்துச் சென்றது வருத்தம் அளிக்கிறது... கலந்து கொண்ட பதிவர்களுக்கு தெரியும் இதில் இருக்கும் மாயை, ஆனால் கலந்து கொள்ளாதவர்கள் வாசிக்கும் போது.... எங்கள் உழைப்பு, திட்டமிடல் கறைபடிந்ததாகவே பதிந்து போகும் என்பதை நீங்கள் அறியாமல் போனதுதான் மிக மோசமான ஆச்சர்யம்... ஒரு விரல் சுட்டும் போது மீதி விரல்கள் நம்மைத்தான் சுட்டுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிந்தவர்கள்தானே...

இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ஒரு பொது நிகழ்வை நடத்துபவர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கலாம் அல்லது அடுத்து எங்காவது நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கலாம் என்பது என் பணிவான கருத்து...

.................. சங்கமம் நடத்துனர் குழு சார்பாக ஈரோடு கதிர்

Wednesday, December 23, 2009

நண்பர்களுக்கு சமர்பிக்கிறோம்.

அன்புசால் நண்பர்களே...

எங்கள் ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தால் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாக சுமார் முப்பது பதிவர்கள் தானாக முன்வந்து பல இடுகைகள் இட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் பல பதிவர்களின் உழைப்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பம் முதல் நடத்தலாம் என்ற நம்பிக்கை கொடுத்தோடு, எந்த ஒரு கணத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் சிறிதும் நம்பிக்கையை சிதைக்காமலும், ஊக்கத்தைக் கைவிடாமலும் தொடர்ந்து பல வகைகளில் ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்து பதிவர்களுமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள்...

தானாக முன்வந்து நிதியளித்த சண்முகராஜன், பீம்பாய், தாமோதர் சந்துரு, அப்பன், பட்டிக்காட்டான், லவ்டேல் மேடி, முருக.கவி, நிதியளித்ததோடு சிறிதும் முகம் சுளிக்காமல் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட பாலாசி, கார்த்திக், நந்து, வால்பையன், அகல்விளக்கு, கோடீஸ்வரன், வசந்த்குமார், வாசகர்கள் ஜாபர், பைஜு, பரணி இவர்கள்தான் இந்த நிகழ்வின் வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணம். அதே சமயம் ஒருவர் தலைமையேற்று நடத்த வேண்டும், மற்றொருவர் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால் மட்டுமே நாங்கள் இருவரும் முன்னால் நிற்கவேண்டியதாக இருந்தது.

பதிவுல நண்பர்கள் நிகழ்வு பற்றி எழுதும் பொழுது அளித்த பாராட்டை எங்களோடு பாடுபட்டு, உதவிய அனைத்து ஈரோடு நண்பர்களுக்கும் சமர்பிக்கிறோம்.

இப்படிக்கு
ஈரோடு கதிர், ஆரூரன்

(பதிவர்கள் ஈரோடு கதிர், ஆரூரன் சார்பாக இடப்பட்ட இடுகை)

Tuesday, December 22, 2009

ஈரோடு பதிவர் சங்கமம்-சில ஒலித்தொகுப்புகள்...

கடந்த ஞாயிறன்று (20.12.09) அன்று ஈரோட்டில் நடைபெற்ற பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்தில் மேடையில் பேசிய சில நாயகர்களின் ஒலித்தொகுப்பினைக் கேட்டு மகிழ கீழே உள்ள சுட்டியினை அழுத்தவும்

ஈரோடு பதிவர் சங்கமம்-சில ஒலித்தொகுப்புகள்.

நன்றி வானம்பாடிகள்.

Monday, December 21, 2009

சங்கமம் குறித்த சக பதிவர்களின் பகிர்தல்

ஈரோட்டில் நாம் நடத்திய பதிவர்கள், வாசகர்கள் சங்மத்தில் கலந்து கொண்ட சக பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் தங்கள் பார்வையை, அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களின் வலைப்பூ இணைப்புகள்....

வாசிக்க பெயர்கள் மேல் சுட்டவும்
பழமைபேசி
ஈரோடு கதிர்
பிரபாகர்
வானம்பாடி
குணசீலன்
கார்த்திகை பாண்டியன்
சஞ்சய்
தண்டோரா
சங்கவி
லாமின்
சுமஜ்லா
ஈரோடு கோடீஸ்
வால்பையன்
இரா. வசந்தகுமார்
வெயிலான்
மைக் முனுசாமி
கேபிள் சங்கர்
ச. செந்தில்வேலன்
பரிசல்காரன்
ரம்யா
ஆரூரன்
க.பாலாசி
வி. என். தங்கமணி
லாமின்
லதானந்த்
ஈரவெங்காயம்
டி.வி. ராதாகிருஸ்ணன்
ச்சின்னப்பையன்
ச. செந்தில்வேலன்

அனைவருக்கும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நன்றிகள்

சங்கமம் – வரவு செலவு

பதிவர்கள் சங்மத்திற்கு நிதியளித்தவர்கள்
ஆரூரன் ரூ.1000
சண்முகராஜன் ரூ.1000
ஈரோடு கதிர் ரூ.1000
கார்த்திக் ரூ.1000
நந்து ரூ.1000
லவ்டேல்மேடி ரூ.1000
வி.என். தங்கமணி ரூ.500
அப்பன் பழனிசாமி ரூ.500
தாமோதர் சந்துரு ரூ.1000
க.பாலாசி ரூ.500
பட்டிக்காட்டான் ரூ.500
அகல்விளக்கு ரூ.500
பீம்பாய் ரூ.1000
இரா.வசந்த்குமார் ரூ.1000
கோடீஸ்வரன் ரூ.1000
வால்பையன் ரூ.1000
முருக.கவி ரூ.300

மொத்த வரவு ரூ.13800

(வீடியோ உதவி - நண்பர் சண்முகராஜன்
நிழற்படங்கள் உதவி – நந்து f/o நிலா)

செலவுகள்
அரங்கு வாடகை ரூ.1200
குடி தண்ணீர் ரூ.183
பதாகைகள் ரூ. 400
அடையாள அட்டை ரூ.235
முகவரி / ரசீது புத்தகம் ரூ.45
சிறப்பு அழைப்பாளர்கள் நினைவுப் பரிசு ரூ.220
பதிவர்களுக்கு வழங்கிய புத்தகம் ரூ.5250
தேநீர் / உணவு ரூ.6000
அரங்கு காவலர் ரூ.100

மொத்த செலவு ரூ. 13663

மீதம் உள்ள தொகை ரூ. 167

இப்படிக்கு
- ஈரோடு கதிர்

பொறுப்பி: மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்!!!

குழுமத்தில் இணைய அழைக்கிறோம்

ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர்களை ”ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில்” இணைய அன்போடு அழைக்கிறோம்.

இணைய விரும்பும் பதிர்வர்கள் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூ முகவரியையும் erodetamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் - துவக்கம்


ஈரோடு பகுதி பதிவர்களால் நடத்தப்பட்ட பதிர்வர்கள், வாசகர்கள் சங்கமம் நிகழ்வில், பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, ஜாபர், அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி ஈசானந்தா, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட்டது.

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO